கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சுமார் ரூ. 620 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (16) மக்கள் பாவனைக்காகக் கையளித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன், இதய சத்திரசிகிச்சை ஆய்வு கூடம் (Cath Lab), மெமோகிராபி பிரிவு மற்றும் சி.டி. ஸ்கேன் (CT Scanner) ஆகிய மூன்று முக்கிய பிரிவுகள் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இங்கு நிறுவப்பட்டுள்ள மெமோகிராபி இயந்திரமானது இலங்கையிலுள்ள மிக நவீன தொழில்நுட்பம் கொண்ட ஐந்து இயந்திரங்களில் ஒன்றாகும்.





