பதுளை – பசறை , கனவரல்ல பகுதியில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 57 புதிய வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (05) நடைபெற்றது.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் இந்தியத் தூதரக அதிகாரி ஹர்விந்தர் சிங் ஆகியோர் முன்னிலையில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
பெருந்தோட்டத்துறை மக்களுக்கு 10,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன.
பதுளை மாவட்டம், கனவரல்ல பகுதியில் மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசித்து வந்த 57 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் கீழ், ஒவ்வொரு வீட்டுக்கும் இந்திய அரசாங்கம் தலா 28 இலட்சம் (2.8 மில்லியன்) ரூபாயையும், உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இலங்கை அரசாங்கம் மேலதிகமாக 4 இலட்சம் ரூபாயையும் ஒதுக்கியுள்ளன.
