பேராதனையைச் சேர்ந்த முகம்மத் சமீர் மற்றும் பாத்திமா முஸ்ரிபா தம்பதியரின் ஒன்றரை வயது மகனான ஹுமைத், தனது அபார நினைவாற்றலால் உலகச் சாதனைப் புத்தகத்தில் (Cholan Book of World Records) இடம்பிடித்துள்ளார்.
பல்வேறு நாடுகளின் கொடிகள், தமிழ் எழுத்துக்கள், காய்கறிகள், வாகனங்கள் மற்றும் விலங்குகளின் சத்தங்களைப் பின்பற்றுதல் (Mimicry) உட்பட 250-க்கும் மேற்பட்ட பொருட்களைத் துல்லியமாக அடையாளம் காட்டியதற்காக, கடந்த ஜூலை 2 அன்று இச்சாதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
மிக இளம் வயதிலேயே உலகச் சாதனை படைத்த இந்த மழலையின் அபார கிரகிக்கும் திறமைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
