பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தியகொட பகுதியில், மனிதர் நுகர்வுக்கு தகாத 4,250 மெட்ரிக் டன் சர்க்கரை கையிருப்புடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றது.
இதன்போது சுமார் 85 கோடி ரூபாய் பெறுமதியான, மனிதர் நுகர்வுக்கு தகாத 4,250 மெட்ரிக் டன் (85,000 மூட்டைகள்) சர்க்கரை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 43, 45, 47 மற்றும் 61 வயதுடையவர்கள். அவர்கள் கடுவெல, அங்கொட, பிலியந்தலை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது.
