மன்னார் கடற்பரப்பில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 554 கடல் அட்டைகள், ஒரு படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவை அனைத்தும் மன்னார் மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
