புபுதுகம, உஸ்வெடகெய்யாவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் போதைப்பொருள் வரத்தகத்தின் ஊடாக சொத்துக்களை ஈட்டியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த பகுதியில் 20 பேர்ச்சஸில் அமையப்பெற்ற காணியில் நிர்மாணிக்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான இரு மாடிகளைக் கொண்ட வீடு மற்றும் வத்தளை பகுதியில் 9.5 பேர்ச்சஸ் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 70 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு, வர்த்தக நிலையம் உள்ளிட்ட சொத்துக்களை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான உத்தரவை வெலிசர நீதவான் நீதிமன்றம் பிறப்பித்தது. நேற்று முதல் 7 நாட்களுக்குள் இந்த பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேக நபர் இருப்பிடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
