பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் மீள ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைவராகவும், பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேல் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் கல்வி ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த இந்தச் சங்கம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
