பாதாள உலகக் குழு உறுப்பினராக அறியப்படும் ‘தெம்பிலி லஹிரு’ என்பவரின் மித்தெனிய பகுதியில் அமைந்துள்ள வீடு தீவைத்து எறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மித்தெனியபொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, தீ வைப்பில் ஈடுபட்டவர்களை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற போது தெம்பிலி லஹிரு பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
