பதுளை மாவட்டத்தில் தனியார் வைத்திய ஆய்கூடமொன்றிலிருந்து காலாவதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இரசாயன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைப்பை நடத்தியுள்ளனர். இதன்போது பாரியளவிலான மருத்துவ உபகரணங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
