கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை இலங்கை ஜூலை 10ஆம் திகதி முதல் தடை செய்துள்ளது.
அமெரிக்காவின் சாத்தியமான வர்த்தக வரி நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின் கீழ், இறக்குமதியாளர்கள் தங்களின் பொருட்கள் கட்டாய உழைப்பின்றி தயாரிக்கப்பட்டவை என்பதை சுங்கத் திணைக்களத்திடம் உறுதிப்படுத்த வேண்டும்.
கட்டாய உழைப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தாத நாடுகள் பட்டியலில் இலங்கையை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி துறையை பாதுகாத்து, சர்வதேச நெறிமுறை வர்த்தக நடைமுறைகளை வலுப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
