பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தளத்தின் கட்டளை மையம், கடற்படை ஆதரவு நிலையம், கிடங்குகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக ஈரானின் புரட்சிகர காவற்படை (IRGC) தெரிவித்துள்ளது.
மோதல் தொடருமானால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதைகளும் இலக்காகும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் கடலோரப் பகுதிகளில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது ஏழு மணிநேரம் நீடித்த துல்லியத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஏவுகணை, ட்ரோன், கடற்படை திறன்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் இலக்காகத் தாக்கப்பட்டதாகவும், வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான அச்சுறுத்தலைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
