நீர்கொழும்பு முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்கரையை அண்மித்த கடற்பரப்பில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கற்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்பிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பகுதிகளில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
