கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, படுகொட பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்த விபத்தில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வீடு ஒன்றில் அத்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மண் மேடு சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய நபர் மீட்கப்பட்டு அக்குரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
