இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், மேலும் 104 புதிய METRO பேருந்துகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான பயண சேவையை வழங்கும் நோக்கில் இந்த புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
சீனாவில் தயாரிக்கப்படும் இந்த 104 METRO பேருந்துகள், தற்போது Foton நிறுவனத்தில் தயாரிப்பு பணிகளில் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
