இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் 30க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் இணைந்து, பதுளை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்காக ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு கண்காட்சியும் வழிகாட்டல் கருத்தரங்கும் நேற்று பண்டாரவளை தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கிழக்கு ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புக்களைச் சரியான முறையில் கண்டறிந்து, அவற்றுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து 200க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இதன்போது நடைமுறை ரீதியான அறிவைப் பெற்றுக்கொண்டனர்.
பல வருடங்களாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையானது இளைஞர்களின் திறமைகளையும் தகுதிகளையும் புறந்தள்ளி, அரசியல் செல்வாக்கு மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பின்னணியில், இந்த வேலைத்திட்டம் ஒரு சிறப்பானதொரு வெளிப்படையான படியாகக் கருதப்படுகிறது
