கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, வெலிப்பென்ன மற்றும் குருந்துகஹஹெதெக்ம அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்ற நிலையங்களுக்கு இடையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
