ஹபராதுவ – யந்தெஹிமுல்ல பகுதியில் நேற்று (19) ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (19) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ், கிராம் 29 700 மில்லிகிராம் ஹெரோயின் 698 கிராம் கஞ்சா மற்றும் ஹேஷ் கலவை மற்றும் 500 இனந்தெரியாத மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 32 வயதுடைய ஹீனடியன, உணவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவராவர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஹபராதுவ பொலிஸாரால் முன்னெடுத்து வருகின்றனர்.
