காலி – கொழும்பு வீதியின் கொஸ்கொட 72ஆவது மைல் கல் அருகே போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான பதிவு செய்யப்படாத அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த பொலிஸார் முயற்சித்தபோது, சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
பின்னர் குறித்த வாகனத்தின் சாரதி உட்பட மூவர் பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அதிகாரிகளை அச்சுறுத்தி வன்முறையாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வாகனங்கள் கொஸ்கொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
