மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச்சூழல் ஆரம்பமாகியுள்ள நிலையில், குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் சுமார் ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஈரான் அமெரிக்காவின் தளங்களை மீண்டும் தாக்க ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவேதான் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
