தெமட்டகொட, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறியவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
