15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க யோசனையை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன்படி மாணவர்கள் கைப்பேசிகளை பாடசாலை நேரங்களில் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் சமூக வலைதளங்களுக்குப் பரவலான தடை விதிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
யோசனை நிறைவேற்றத்தை அடுத்து கருத்துரைத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், சிறுவர்களின் பாதுகாப்பில் பிரான்ஸ் ஐரோப்பாவிற்கு முன்னோடியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனை நிறைவேற்றத்தின்படி, 2026 செப்டமபர் 1 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக கணக்குகளை ஆரம்பிப்பது தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
