அநுராதபுரம் மாவட்டத்தின் கலன்பிந்துனுவெவ – மொறகொட பகுதியில் தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்களை மொறகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், லபுனோருவ பகுதியில் நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக்கொண்டிருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 37, 43, 52 மற்றும் 54 வயதுடைய கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ மற்றும் மொறகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் அநுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
