நாட்டில் சிறுவர்கள் இணையதளங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இணையவழித் துன்புறுத்தல்களிலிருந்து (Online Harassment) அவர்களைப் பாதுகாப்பதற்கான பரந்த அளவிலான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இத்தேசிய திட்டம் சிறுவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பதற்கும் தேவையான கண்காணிப்பு முறைமைகள் மற்றும் கல்விசார் தீர்வுகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் டிஜிட்டல் கல்விச் செயலணியின் அதிகாரிகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல் ஜூலை 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
