வத்தளை பொலிஸ் பிரிவு, பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் (கதிரண பாலம்) அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் நேற்று இரவு உயிரிழந்தார்.
ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் குறித்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
