தெஹிவளை – மகரகம வீதியில், தெஹிவளை சந்தியை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று பாதசாரிப் பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த 73 வயதுடைய மடபாத்த பகுதியைச் சேர்ந்த குறித்த மூதாட்டி , களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹிவளை மற்றும் கெஸ்பேவ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
