வடமேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சாவடி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பிராந்திய தலிபான் அமைப்பான TTP பொறுப்பேற்றுள்ளதுடன், நான்கு தற்கொலைத் தாக்குதலாளர்கள் இதில் ஈடுபட்டதாகவும் அறிவித்துள்ளது.
தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து தாக்குதலைத் திட்டமிட்டதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது பாகிஸ்தானின் உள்விவகாரம் எனக் கூறி ஆப்கானிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
