டிட்வா புயல் பாதிப்புக்கு 9 மாதங்கள் கடந்தும் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி வெவேந்தன் கிராம மக்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை பாதுகாப்பற்ற நிலையில் மூடப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் தொலைதூரப் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து செலவு, சேதமடைந்த வீதிகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
