கடுவெல, பொமிரிய பகுதியில் லொறி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த காலாவதியான உரப் பொருட்கள் அடங்கிய தொகையொன்று அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே இந்த உரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சோதனையின் போது 376 கிலோகிராம் காலாவதியான திட உரமும், 1,170 லீட்டர் காலாவதியான திரவ உரமும் கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் மற்றும் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் செயல்படும் வியாபாரிகள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
