உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு நேற்று (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட தரப்பினர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், மனு தொடர்பான மேலதிக பரிசீலனைக்காக இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
