குடிமக்கள் அரச சேவையிடமிருந்து நேர்மையான கலாசாரத்தையும் திறமையான சேவையையும் மட்டுமே எதிர்பார்க்கின்றனர் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
“நேர்மையான கலாசாரம் – சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, கல்வி அமைச்சில் தேசிய நேர்மை வாரம் நேற்று (27) இசுருபாயவில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊழலற்ற, மக்கள் நலன்சார்ந்த நிர்வாகமும் நேர்மையான பண்பாடும் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அந்த நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
