திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 47 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (27) காலை அம்பாறை நோக்கிச் செல்வதற்காக பயணித்த முச்சக்கரவண்டி, சாரதி பாதை மாறி பொத்துவில் நோக்கிச் சென்றபோது, வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்புத் தூணில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சாரதி மற்றும் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
