ஜனவரி மாத ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஜூலை 01 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 167,401 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவ்அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுள் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 38,785 ஆகும்.
