இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 28ஆம் திகதி இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் நான்கு பேர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுரிகஸ்வெவ பகுதியில் வீதியைக் கடந்த நாய் ஒன்றைத் தவிர்க்க முயன்றபோது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடகவெல பகுதியில் 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளதுடன், பின்னால் பயணித்த நபர் காயமடைந்துள்ளார்.
மாவத்தகம பகுதியில் கண்டி – குருநாகல் பிரதான வீதியைக் கடக்க முயன்ற 67 வயதுடைய பாதசாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்துள்ளனர்.
மஹாவ பகுதியில் பக்கவீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வீதி விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
