காங்கேசன்துறை துரிதகதி புகையிரதம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயாங்கொடை புகையிரத நிலையத்தில் பழுதடைந்து நின்றதால், பயணிகள் பெரும் தாமதங்களையும், நெரிசலையும் சந்தித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்ட இந்த புகையிரதம், காலை 8.00 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது.
பூரணை தினம் என்பதால் அனைத்து ஆசனங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, பழுதடைந்த புகையிரத்துக்குப் பின்னால் வந்த ‘யாழ் தேவி’ விரைவு புகையிரதத்தில் பயணிகள் ஏற்றிவிடப்பட்டனர்.
இதனால் 2 புகையிரதங்களின் பயணிகள் ஒரே சேவையில் பயணிக்க நேரிட்டதுடன், கடும் மக்கள் நெரிசலும் அசௌகரியமும் ஏற்பட்டது.
வெயாங்கொடை மற்றும் அதனைத் தொடர்ந்துள்ள புகையிரத நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்காக, முற்பகல் 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட மாற்று புகையிரத சேவையை தொடருந்து திணைக்களம் இயக்கியுள்ளது.
