மன்னார் மாவட்டத்தில் முதல் முறையாக ‘சிசு சரிய’ (Sisu Seriya) மாணவர் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நியாய விலைக் கல்விப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சேவையை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீண்டகாலமாக நாட்டின் பல பகுதிகளில் நடைமுறையில் இருந்த இந்தச் சேவை, இதுவரை மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படாத நிலையில், தற்போது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சேவையின் மூலம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து வசதியைப் பெற முடியும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜகதீஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
