வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான, பள்ளியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சீதுவை, முக்கலங்கமுவ பகுதியில் வைத்து நேற்று (29) புதன்கிழமை குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாடகைக் காரை பெற்றுக்கொள்வதற்காக தனது வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் செய்து உதவியதாக கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் சீதுவை, முக்கலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
