காலி மாவட்டம் இரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை 40 அடி நீளமுடைய வெள்ளை நிற கப்பல் கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
ஆழ்கடலில் பயணித்த கப்பல் ஒன்றிலிருந்து இக்கொள்கலன் நழுவி கடலில் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் நேற்று (02) இந்தூருவை பகுதியில் உள்ள கடற்கரையிலும் இதேபோன்ற மற்றொரு வெள்ளை நிற கொள்கலன் கரை ஒதுங்கியிருந்தது.
கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் பயணித்த கப்பலொன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் விழுந்த காலியான கொள்கலன்களில் ஒன்றாக இது இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
