“பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்கும் போது, திறமையான, வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட நிறுவனங்களை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இத்துறையின் எதிர்காலமானது வலுவான தொழில்நுட்ப அறிவில் மட்டுமல்லாது, நேர்மை, தகவமைப்புத் திறன், புதுமை மற்றும் பொதுச்சேவை மீதான தீவிர அர்ப்பணிப்பு கொண்ட ஒரு தலைமுறையிலேயே தங்கியுள்ளது.”
“எல்லைகளுக்கு அப்பால், அடிவானத்திற்கு அப்பால் — உலகின் எதிர்காலத்தை வரைபடமாக்கல்” (Beyond Boundaries, Beyond Horizons – Mapping the Future of the World) எனும் தொனிப்பொருளில் ஓகஸ்ட் 02 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை அளவையாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய பங்களிப்பு மற்றும் தொழில்முனைவோர் விருது, மற்றும் மறைந்த தொழில்வல்லுநர்களைக் கௌரவிக்கும் நினைவு உபகார விருது ஆகிய விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.
