வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கன்னி விக்னராஜாவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் ஆதரவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், புதுப்பிக்கத்தக்க சக்தி விரிவாக்கம், தேசிய தொழிலாளர் திறன் மேம்பாடு மற்றும் காலநிலை நிதி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
காலநிலை கடன், பசுமை மற்றும் நீல பத்திரங்கள் உள்ளிட்ட புதிய நிதி முறைகள் மற்றும் சுகாதாரம், சுற்றுலா துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
