காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படாத அழகுசாதனப் பொருட்களை சேமித்து வைத்திருந்தது தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, கொழும்பு 13-ஐ தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கும் அதன் இயக்குநருக்கும் மொத்தமாக 100,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான ஆயுர்வேத மருந்துகள், சவர்க்காரங்கள், ஷாம்புகள், களிம்புகள், எண்ணெய்கள் மற்றும் பிற பொருட்கள் உட்பட, கைப்பற்றப்பட்ட சுமார் 920 பொருட்களை உடனடியாக அழிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காலாவதியான மருந்துகள் அல்லது கட்டாய அடையாளக் குறியீடு இல்லாத பொருட்களை விற்கும் வியாபாரிகளை, அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி எண் மூலம் புகாரளிக்குமாறு நுகர்வோர் விவகாரங்கள் ஆணைக்குழு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
