அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
தொழில்துறை பங்காளர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மோட்டார் வாகனங்கள் (அதிவேகப் பாதைகள்) கட்டளையின் படி, அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசனப்பட்டிகள் இல்லாத வாகனங்களில் அவற்றை பொருத்துவதற்கான ஆரம்ப சலுகைக் காலம் கடந்த ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், புதிய திருத்தத்தின் மூலம் குறித்த காலம் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திருத்தம் 2026 ஜூன் 17 ஆம் திகதியிட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
