சென்னையில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினரான விஜய்தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை திறந்து வைப்பார் என அவர் கூறியுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு, இந்தக் கட்டிடப் பணிகளுக்காக விஜய் தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்தார்.
சட்டச் சிக்கல்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு கட்டிடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தக் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னரே தனது திருமணத்தை நடத்துவேன் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
