முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
கண்டி–யாழ்ப்பாணம் A9 வீதியில் கொக்காவில் பகுதியில் இளநீர் ஏற்றிச் சென்ற பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், சாரதி வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.
சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் சாரதி மீட்கப்பட்டுள்ளதுடன், இளநீர் ஏற்றிச் சென்ற பொலிரோ ரக வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
