புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கெப் ரக வாகனமொன்றில் பெருமளவிலான கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் இருந்து 17 கிலோ கிராம் 985 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கணவனும், 22 வயதுடைய அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டு கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (10) திங்கட்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
