கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, பொலன்னறுவை – பாகமுனா பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாகமுனா பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, திடீரென வீதியைக் கடந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோதலின் பின்னர் பேருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலுள்ள வாய்க்காலுக்குள் சென்று அந்தரத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் மற்றும் பெண் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
