பொலன்னறுவை, சேவகம பகுதியில் வலையில் சிக்கியிருந்த அரியவகை மீன்பிடி பூனை ஒன்று வனவிலங்கு அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த மீன்பிடி பூனை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள், வலையில் சிக்கியிருந்த மீன்பிடி பூனையை மீட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிரித்தலே வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தற்போது அந்த மீன்பிடி பூனை வனவிலங்கு கால்நடை வைத்தியர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றது.
