Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளையில் இருந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழப்பு

#தெஹிவளை #ஒட்டகச்சிவிங்கி #விலங்குகள் #தேசியவிலங்குகாட்சிச்சாலை #வனவிலங்குகள் #இலங்கைசெய்தி #DehiwalaZoo #Giraffe #SriLankaNews

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழந்துள்ளதாக தேசிய தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (18) இரவு உயிரிழந்த இந்த பெண் ஒட்டகச்சிவிங்கியின் வயது சுமார் முப்பதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பதற்கு முன்னர் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு எவ்வித நோய்களுக்குமான அறிகுறிகளும் தென்படவில்லை எனவும், முதுமை காரணமாக ஏற்பட்ட இயற்கையான சூழ்நிலையே இந்த இறப்புக்குக் காரணம் என அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காடுகளில் வாழும் ஒட்டகச்சிவிங்கிகளின் சராசரி ஆயுட்காலம் 20 முதல் 25 ஆண்டுகள் வரை மட்டுமே ஆகும் என்றும், மிருகக்காட்சி சாலைகளில் உள்ள சூழலில் அவைகளால் அதைவிடக் கூடுதல் காலம் வாழ முடியும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், மேலதிக பிரேதப் பரிசோதனைகள் இன்று (19) மேற்கொள்ளப்படவுள்ளன.

விலங்கியல் பூங்கா சூழலில் விலங்குகளுக்கு வேடுவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்தல், அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப சத்தான மற்றும் சீரான உணவை வழங்குதல், சுத்தமான மற்றும் பொருத்தமான வாழிடங்களைப் பராமரித்தல், அத்துடன் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தேவையான கால்நடை மருத்துவச் சிகிச்சைகளை வழங்குதல் ஆகியவற்றின் காரணமாகவே இந்த ஒட்டகச்சிவிங்கியால் முப்பது ஆண்டுகள் வரை நீண்ட ஆயுளைப் பெற முடிந்துள்ளது.

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தினால் விலங்கு நலன், மரபணு பன்முகத்தன்மையைப் பேணுதல் மற்றும் விலங்கு பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுடன் செயல்படுத்தப்படும் விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், இந்த ஆண்டு முடிவதற்குள் புதிய இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் மாடுகள் கடத்தல் – இருவர் கைது

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் அமைதியின்மை தொடர்பில் கலந்துரையாடல்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள்களை திருடி பாதாள உலகக் குழுவுக்கு விற்பனை செய்யும் ‘பொம்புவல சுத்தா’ களுத்துறையில் கைது!

புரட்டாதி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube