புத்தளம் கடலேரியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7.5 இலட்சம் மருந்து காப்ஸ்யூல்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழுள்ள இலங்கை கடற்படையின் விஜய கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்களால் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் இருந்து குறித்த காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, படகும் காப்ஸ்யூல்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
