மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் (CAR) மேற்குப் பகுதியில், கேமரூன் எல்லையருகே உள்ள ஒரு பாரம்பரிய தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஸம்போயே கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடி சுரங்கங்களில் வேலை செய்து கொண்டிருந்த வேளை இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பல நிலத்தடி சுரங்கங்கள் சரிந்ததன் விளைவாக இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சுரங்கத் தொழில் பரவலாக உள்ளது, ஆனால் குறைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வேலை மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
