தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 38 வயதான முன்னாள் உலக குத்துச்சண்டை செம்பியன் சொலானி டெடே, அவரது வீட்டின் முன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது அவருடன் பயணித்த 27 வயதான பெண்ணுக்கும் காயங்கள் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொலானி டேடே WBF, WBO ,IBF ஆகிய பிரிவுகளில் உலக செம்பியன் பட்டங்களை வென்றவர்.
2017-ஆம் ஆண்டு உலக செம்பியன்ஷிப் போட்டியில், எதிராளியை வெறும் 11 வினாடிகளில் நொக்கவுட் செய்து ‘கின்னஸ் உலக சாதனை’ படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
